காயகல்ப மந்திரம்

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் + ஸ்ரீ காயத்திரி மந்திரம் = காயகல்ப மந்திரம்.

ஒம் த்ரயம் பகம் யஜா மஹே

சுகந்தீம் புஷ்டி வர்த்தனம் உர்வாகுக

இவ பந்தனாத் ம்ருத்யோ

முக்க்ஷியமாம் அம்ருதாத் :

காயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையருள் வழங்கும் ஒவ்வொரு சக்தி உண்டு.

ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ் தீமஹி

தியோ யோன ப்ரசோதயாத்

இதுவே காயத்ரீ மந்திரம்.

மேற்கண்ட இரு மந்திரங்களையும் தினமும் சொல்லுவதால் கொடிய வினைகள் விலகிப்போகும். உடல் பலம், மனோபலம் கூடும்.வேத சாத்திரங்களில் நான் காயத்திரியாக இருக்கின்றேன் என்று பகவத்கீதையில் கிருஷ்ண பகவான் கூறுகிறார்.காயத்திரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது.காயத்திரி மந்திரம் சொல்லும்போது காயத்திரி தேவியையும், சூரிய பகவானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும் நினைவில் நிறுத்திச் சொல்ல வேண்டும்.

இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான

 ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும்.

பூர்ப்புவ ஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும்.

 

தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.

தத்– என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.

ச– என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.

வி– என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.

துர்-என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.

வ-என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.

ரே – என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.

ணி– எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்

யம்– ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.

பர்– கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.

கோ– கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.

தே– தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்

வ– வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.

ஸ்ய– சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.

தீ– தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.

ம – மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.

ஹி– ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.

தி– மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்

யோ– யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.

யோன– யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.

நஹ்– தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.

ப்ர்– ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.

சோ– ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.

த்– த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.

யாத்– நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.

                      இந்த மந்திரங்களை பிரயோகம் செய்வதால் உடல் வலிமை மனதில் தெளிச்சி ஏற்பட்டு ஒருவிதமான உத்வேகம் ஏற்படும்.தங்களை எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து பாருங்கள். 

நன்றி - குரு இராஜக்குமாரனந்தா

Sakthi

No comments:

Post a Comment

Instagram